என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோடைகால பயிற்சி"
- 250 மையங்களில் நடத்தப்படுகிறது
- ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாக்கள் என தலைப்பு
வேலூர்:
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடைகால பயிற்சி வகுப்புகள் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாக்கள் என்ற தலைப்பில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக நடத்தப்பட்டு வருகின்றது.
வேலூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 30 மையங்கள் விதம் 250 மையங்களில் நடத்தப்படுகின்றது.
அரியூர், நம்பி ராஜபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது,
வேலூர் மாநகராட்சியின் 4-வது மண்டலக் குழு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட துணைத் தலைவர்கள் செ.நா.ஜனார்த்தனன் கே.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி வழிகாட்டுதலின்படி பயிற்சிகள் நடைபெற்றன. இந்த பயிற்சிகள் மே மாதம் 2-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரையிலும் அனைத்து ஒன்றியங்களில் அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் 30 நாட்கள் நடைபெறுகிறது.
வானவில் மன்ற கருத்தாளர் அருணா மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வ தொண்டர்கள் தீபா, மாலினி, பாரதி, சோனியா மற்றும் லதா ஆகியோரின் பங்கேற்றனர்.
- சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளை யாட்டுக்களில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவு ள்ளது.
- காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவித்திருப்ப தாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சேலம் பிரிவு சார்பாக அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 15.05.2023 வரை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுக்களில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவு ள்ளது.
பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும். முகாமில் சிறந்த விளை யாட்டு வீரர்களைக் கொண்டு அந்தந்த விளை யாட்டுக்களில் பயிற்சி அளிக்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் முட்டை, பால் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
எனவே, சேலம் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்